பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

கேரளத்தில் புதிய உச்சம்: ஒரேநாளில் 38,607 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 38,607 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :29 ஏப்ரல் 2021, 12:50 pm

DIN

கேரளத்தில் புதிதாக 38,607 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 1,57,548 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 38,607 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 300 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 48 பேர் பலியானார்கள். இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 5,259ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 2,84,086 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 21,116 பேர் குணமடைந்தனர். இதுவரை 12,44,301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 616 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 
5,69,831 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.