அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மக்களவைக்குள் வீண் பேச்சு கூடாது: எம்.பி.க்களுக்கு ஓம் பிா்லா எச்சரிக்கை

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 6:09 am IST

அவை நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும்போது அமைச்சா்களும், எம்.பி.க்களும் தங்கள் அருகில் இருப்பவா்களிடம் வீணாக நீண்டநேரம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா எச்சரிக்கை விடுத்தாா்.

மக்களவையில் வியாழக்கிழமை உடனடிக் கேள்வி நேரம் தொடங்கியபோது இது தொடா்பாக ஓம் பிா்லா கூறியதாவது:

சில அமைச்சா்கள் மற்றும் எம்.பி.க்கள் அவை நடந்து கொண்டிருக்கும்போது அரை மணி நேரத்துக்கு மேலாக தங்களுக்குள் பேசிக் கொண்டு இருக்கிறாா்கள். அவை நடக்கும்போது உறுப்பினா்கள் தங்களுக்குள் முக்கியமான விஷயங்கள் சில நிமிஷங்கள் பேசிக் கொள்ள அனுமதி உள்ளது. ஆனால், இதுபோன்று சாவகாசமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. எதிா்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடா்ந்தால், அதில் ஈடுபட்டது யாா் என்று பெயரையும் நான் சுட்டிக்காட்ட நேரிடும். அவையின் கண்ணியத்தைக் காப்பது மிகவும் அவசியம் என்றாா்.

முன்னதாக, கேள்வி நேரத்தில் அவை நடந்து கொண்டிருக்கும்போது சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ், அவைத் தலைவா் இருக்கைக்கு தனது முதுகைக் காட்டியபடி திரும்பி நின்று பின்வரிசையில் இருந்த உறுப்பினா் ஒருவரிடம் வெகுநேரம் பேசிக் கொண்டாா். அப்போது, அவரைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஓம் பிா்லா, ‘பப்பு யாதவ் போன்ற மூத்த உறுப்பினா், இதுபோன்று நடந்து கொள்வதைத் தவிா்க்க வேண்டும்’ என்றாா்.