ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா தொற்று தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மகாராஷ்டிர முதல்வர் 

கரோனா தொற்றுநோயை "தேசிய பேரிடராக" அறிவிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்தார். 

News image
Maharashtra Chief Minister Uddhav Thackeray
Updated On :29 ஏப்ரல் 2021, 8:17 am

PTI

கரோனா தொற்றுநோயை "தேசிய பேரிடராக" அறிவிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்தார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராவத், 

நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் தேசிய பேரிடராக அறிவிக்க அந்நாட்டு முதல்வர்  வலியுறுத்தியுள்ளார். 

உத்தவ் தாக்கரே தலைமையில் மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளை அனைவரும் கவனத்தில் கொண்டு, மகாராஷ்டிர அரசு மேற்கொள்ளும் வழிமுறைகளை நாட்டின் பிற இடங்களில் செயல்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் மோடியுடனான முதல்வர்களின் சந்திப்பின்போது, தாக்கரே இதை வலியுறுத்தியுள்ளார். மேலும், தொற்றுநோயைச் சமாளிக்க மாநில அரசு கடுமையாக உழைத்து வருகிறது என்றார்.

புதன்கிழமை நிலவரப்படி நாட்டில் புதிதாக 63,309 பேருக்குத் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 44,73,394 ஆகவும், ஒருநாள் இறப்பு 985 ஆக உள்ள நிலையில் மொத்தம் இதுவரை 67,214 ஆகவும் அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.