
கர்நாடகத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் 48,296 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 48,296 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,23,142 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 14,884 போ் இன்று வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 11,24,909 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 3,49,496 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 217 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 15,523 போ் உயிரிழந்துள்ளனா். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.