மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவாவில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படாது: முதல்வர் பிரமோத் சாவந்த் 

கோவாவில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படாது என்று மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 1:31 pm

கோவாவில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படாது என்று மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கோவாவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. 

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே கோவா முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் மே 3-ம் தேதி காலை வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோவாவில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படாது என்று மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், 18 முதல் 45 வயதுடையவர்களுக்கு, கரோனா தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை. தடுப்பூசி கிடைத்தவுடன் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்குவோம். பொதுமுடக்கம் மேலும் நீட்டிக்கப்படாது. வீட்டிலேயே இருந்து அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.