6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவாவில் இன்று முதல் முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்

கரோனா தொற்று மாநிலத்தில் அதிகரித்துவரும் நிலையில், கோவாவில் இன்று முதல் மே 3 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

News image
கோவாவில் இன்று முதல் முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள் 
Updated On :30 ஏப்ரல் 2021, 6:05 am

PTI

கரோனா தொற்று மாநிலத்தில் அதிகரித்துவரும் நிலையில், கோவாவில் இன்று முதல் மே 3 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கோவாவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே கோவா முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் மே 3-ம் தேதி காலை வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததால், மக்கள் வீட்டிற்குள் முடங்கியிருந்தனர். சாலைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

ஆனால் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 

மேலும், சாலைகளில் எந்தவிதமான போக்குவரத்தும் இயங்கவில்லை என்றும், குறிப்பாக நகர்ப்புறங்களில் கடுமையான ரோந்துப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கோவாவில் இதுவரை 88,028 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,146 பேர் தொற்றுக்கு இறந்துள்ளனர். ஏப்ரல் 29 நிலவரப்படி, கடலோர மாநிலத்தில் 20,898 சிகிச்சையில் உள்ளனர்.

====

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.