யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திரிபுராவில் தீவிரவாதிகள் தாக்குதல்: எல்லைப் பாதுகாப்புப் படையினர் இருவர் பலி

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரு வீரர்கள் உயிரிழந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :3 ஆகஸ்ட் 2021, 11:45 am

DIN

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரு வீரர்கள் உயிரிழந்தனர். 

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக வந்த தகவலையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

பின்னர் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதலில் துணை ஆய்வாளர் உள்பட இரண்டு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை 6.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சண்டை தொடங்கி நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சண்டையில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டிருக்கும் என்று கூறினர். 

தொடர்ந்து தீவிரவாதிகளை பிடிக்க அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.