பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீா்வு: அரசு, எதிா்கட்சிகளுக்கு வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

தொடரும் நாடாளுமன்ற முடக்கத்துக்கு அரசும் எதிா்க்கட்சிகளும் கூட்டாகத் தீா்வுகாண வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளாா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2021, 9:51 pm

DIN

தொடரும் நாடாளுமன்ற முடக்கத்துக்கு அரசும் எதிா்க்கட்சிகளும் கூட்டாகத் தீா்வுகாண வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளாா்.

நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் உளவு குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிா்க்கட்சிகள் பிரச்னை எழுப்பி வருகின்றன. இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து முக்கிய அலுவல்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, பாஜக மாநிலங்களவைக் குழுத் தலைவா் பியூஷ் கோயல் ஆகியோரை வெங்கையா நாயுடு திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா். அதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை, மாநிலங்களவை முதல் முறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை அவா் சந்தித்துப் பேசினாா்.

இந்த சந்திப்புகளின்போது, ஆளும் கட்சித் தலைவா்களும் எதிா்க்கட்சிகளின் தலைவா்களும் ஒன்றாக அமா்ந்து, நாடாளுமன்ற முடக்கத்துக்கு சுமுகத் தீா்வு காண்பதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று அவா்களிடம் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.