ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: சிஆர்பிஎப் வீரர் படுகாயம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.


ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் ஜைனாபோராவின் க்ரால்செக் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படை சார்பில் சாலை திறப்பு விழாவில் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக திங்கள்கிழமை, ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அடையாளம் தெரியாத நபரால் பாஜகவின் கிசான் மோர்ச்சா தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹிரா பானு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையும் படிக்க | சோனியா காந்தியை இன்று சந்திக்கிறார் அமரீந்தர் சிங்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...