பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று தில்லியில் சந்திக்கிறார்.
மாநில அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு குறித்து அவர் காங்கிரஸ் தலைவரிடம் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே சுனில் ஜாகருக்குப் பதிலாக நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த மாதம் பொறுப்பேற்றார்.
அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு மாநில அரசும் கட்சித் தலைமையும் ஒற்றுமையாக செயல்படும் என்று அமரீந்தர் சிங் கூறியிருந்தார்.
பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்ட பிறகு சோனியா காந்தி - அமரீந்தர் சிங் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.
முன்னதாக வியாழக்கிழமை, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


