எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

2025க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க கூட்டு முயற்சி தேவை: வெங்கையா நாயுடு

2025க்குள் காசநோய் இல்லாத இந்தியா என்ற இலக்கை அடைய கூட்டு முயற்சி தேவை என துணைக் குடியரசுத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

News image
கோப்புப்படம்
Updated On :10 ஆகஸ்ட் 2021, 7:22 am

DIN

2025க்குள் காசநோய் இல்லாத இந்தியா என்ற இலக்கை அடைய கூட்டு முயற்சி தேவை என துணைக் குடியரசுத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுடன் இணைந்து காசநோய் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, சுகாதாரத்துறை அமைச்சர் மனுஷ்க் மாண்டவியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இதற்குத் தலைமை வகித்த துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது: 

இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலுமாக ஒழிக்க அனைவரும் கூட்டாக பாடுபட வேண்டும். 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிப்பாட்டை எடுத்துள்ளது. காசநோய் அச்சுறுத்தல் போன்ற பொது சுகாதார சவால்களை எதிர்கொள்வதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.

நாடாளுமன்றத்தில் இதுபோன்ற சுகாதார பிரச்னைகளை எழுப்புவதைவிட தங்கள் தொகுதி சார்ந்து பங்களிப்பதன் மூலமாக நோயின் தீவிரத்தை தடுக்க முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். 

2000 ஆம் ஆண்டிலிருந்து, காசநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையின் மூலம் 6.3 கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பல்வேறு சுகாதார குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்தியா கண்டு வருகிறது. 1950இல் மனிதனின் சராசரி ஆயுள்காலம் 35 வருடங்களாக இருந்த நிலையில் இன்று 69.4 வருடங்களாக உயர்ந்துள்ளது. எனவே, கூட்டு முயற்சிகள் மூலம் 2025க்குள் இந்தியா கண்டிப்பாக காசநோயிலிருந்து விடுபட முடியும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.