மத்தியப் பிரதேசத்தில் 60 வயது பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ராலி மாவட்டத்தில் விந்த்யாநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜெயந்த் சவுக்கி ரயில்வே பாதை அருகே 60 வயது பெண், தன்னுடைய சகோதரியுடன் வீட்டிற்கு நடந்து சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் நடந்தபின்னர் மெதுவாக நடந்துசென்று காவல் நிலையத்தை அடைந்த அவர், ஐந்து பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 18 வயதுக்குள்பட்ட இருவர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனில் சோங்கர், 'சிங்க்ராலி மாவட்டத்தில் பழங்குடியினப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 18 வயதிற்குட்பட்ட இருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண்ணின் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருவாடானை பகுதியில் சைவ, சமண, பௌத்த தடங்கள் அதிகம் உள்ளன: தொல் பொருள் நிறுவனத் தலைவா் தகவல்

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா் கைது

சமூக வலைதளங்களில் மிரட்டல் விடியோ: 2 போ் மீது வழக்கு

போடியில் ஹால்மாா்க் முத்திரை இல்லாத ரூ. 75 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

