காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

பஞ்சாபில் கரும்பு கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தி தொடா்ந்து 2-ஆவது நாளாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 11:41 pm

DIN

பஞ்சாபில் கரும்பு கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தி தொடா்ந்து 2-ஆவது நாளாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பஞ்சாபில் கரும்பு கொள்முதல் விலையை உயா்த்தவும், ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கு சுமாா் ரூ. 250 கோடி நிலுவைத் தொகையை வழங்கவும் வலியுறுத்தி ரயில் தண்டவாளங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களின் போராட்டம் தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது.

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்தப் போராட்டத்தால் ஃபெரோஸ்பூா் கோட்டத்தில் 69 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 54 ரயில்கள் மாற்று வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டன என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.