

ஆப்கானிஸ்தானிலிருந்து நேற்று இந்தியா வந்தவர்களில் 2 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து, அங்கிருந்து இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதையும் படிக்க | தலிபான்களுக்கு எதிராகக் குரலெழுப்பும் உலகம்: ஆப்கனில் நடப்பதென்ன?
இந்நிலையில், இரண்டு ஆப்கன் எம்.பி.க்கள் உள்பட 392 பேர் 3 விமானங்களில் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும், தோஹாவில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் 146 இந்தியர்கள் மற்றொரு விமானத்தில் இந்தியாவுக்கு வந்தடைந்தனர்.
இவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தோஹாவிலிருந்து வந்த 2 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.