ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அங்கிருந்து பல்வேறு நாடுகளும் தங்கள் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இந்தியாவின் மீட்பு நடவடிக்கை ஆக. 16-ஆம் தேதி தொடங்கியது. முதல் இரு நாள்களில் காபூலில் இருந்து 190 போ் மீட்கப்பட்டனா். இவா்களில் பெரும்பாலானோா் தூதரகப் பணியாளா்கள் ஆவா். கடந்த ஞாயிற்றுக்கிழமை 392 பேரும், திங்கள்கிழமை 146 பேரும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனா். இந்தியா்கள் மட்டுமின்றி ஆப்கன் சீக்கியா்கள், ஹிந்துக்கள், இந்தியாவுக்கு வருவதற்கு விருப்பம் தெரிவிக்கும் ஆப்கன் குடிமக்களையும் மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டவா்களில் ஆப்கன் எம்.பி.க்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரும் அடங்குவா்.