அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

3-வது அலையில் மகாராஷ்டிரம் அதிகம் பாதிக்கப்படும்: சுகாதாரத் துறை

கரோனா மூன்றாவது அலையில் மகாராஷ்டிரத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான கரோனா பாதிப்புகள் பதிவாகலாம் என்று சுகாதாரத் துறை கணித்துள்ளது.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2021, 4:40 pm

DIN

கரோனா மூன்றாவது அலையில் மகாராஷ்டிரத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான கரோனா பாதிப்புகள் பதிவாகலாம் என்று சுகாதாரத் துறை கணித்துள்ளது.

அதிகபட்சமாக மும்பை, புணே நகரங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலையில் மார்ச் 11-ம் தேதி 91,100 பேருக்கு அதிகபட்சமாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

கரோனா மூன்றாவது அலையில் புணே நகரில் 1.36 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.  

இரண்டாம் அலையில் மார்ச் 19-ம் தேதி 1.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது அலையில் இது 1.87 லட்சமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாக மும்பை மற்றும் புணே நகரங்கள் இருக்கும். இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.