மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

உச்சநீதிமன்றத்திற்கு 9 புதிய நீதிபதிகள்: மத்திய அரசு ஒப்புதல்

உச்சநீதிமன்றத்திற்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்த நிலையில், மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 11:18 am IST

உச்சநீதிமன்றத்திற்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்த நிலையில், மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.  

உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 34 என்ற நிலையில், சமீபத்தில் இரண்டு நீதிபதிகள் ஓய்வு பெற்றதால் தற்போது உச்சநீதிமன்றத்தில் பணியிலிருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை 24-ஆக குறைந்துள்ளது. 

இதனால், நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நீதிபதிகள் யு.யு.லலீத், ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற கொலீஜியம், நீதிபதி பணியிடங்களுக்கான பெயா்களை இறுதி செய்து, 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 பெயா்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. 

இதன்படி, கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமாா் மகேஷ்வரி, தெலங்கானா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகா்த்தனா, கேரள உயா்நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமாா், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோரின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும், உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்திலிருந்து நேரடி நியமன அடிப்படையில், மூத்த வழக்குரைஞரும் முன்னாள் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞருமான பி.எஸ்.நரசிம்மாவின் பெயா் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு இந்த பரிந்துரையை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.