குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மேற்கு வங்கம் - ரூ.18 லட்சம் மதிப்புள்ள வெள்ளிக்கட்டிகள் பறிமுதல்

மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்தில் ஆவணகளின்றி கொண்டு செல்லப்பட்ட 22.18 கிலோ வெள்ளிக்கட்டிகளை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :26 ஆகஸ்ட் 2021, 12:33 pm

DIN

மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்தில் ஆவணகளின்றி கொண்டு செல்லப்பட்ட 22.18 கிலோ வெள்ளிக்கட்டிகளை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

ஹவுரா ரயில் நிலையத்தில் நேற்று (ஆக-25) அன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் பெரிய பைகளை தூக்கிச் சென்றுகொண்டிருந்த இருவரை பரிசோதனை செய்தபோது விற்பனை ரசீது  இல்லாமல் கொண்டுவரப்பட்ட 22.18 கிலோ வெள்ளிக்கட்டிகள் இருப்பதை பாதுகாப்பு வீரர்கள் உறுதி செய்தனர்.

இதுகுறித்து இருவரிடம் விசாரித்த போது வரியில் இருந்து தப்பிப்பதற்காக விற்பனை ரசீது இல்லாமல் வெள்ளியை வாங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. பின் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்கட்டிகளை மாநில ஜிஎஸ்டி துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளியின் மதிப்பு ரூ.18 லட்சம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.