விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உத்தரப் பிரதேசம் : புதிதாக 21 பேருக்கு கரோனா

இந்தியாவில் கரோனா தொற்று கட்டுக்குள் இருக்கும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

News image
உத்தரப் பிரதேசம் : புதிதாக 21 பேருக்கு கரோனா
Updated On :27 ஆகஸ்ட் 2021, 9:59 am

DIN

இந்தியாவில் கரோனா தொற்று கட்டுக்குள் இருக்கும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனுடன் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்னிக்கை 341 ஆகும்.  தினசரி தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் சதவீதம் 0.01 ஆகவும் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் சதவீதம் 98.6 ஆகவும் இருக்கிறது.

மேலும் இதுவரை 6.68 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7.41 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நோய் கட்டுப்பாடுகள் குறித்து பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் 'பாதுகாப்பு நடவடிக்கைகளால் கரோனா தொற்று குறைந்து வந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் ' எனத் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக மாநிலத்தில் 18 மாவட்டங்கள் கரோனா இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.