விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கருவேல மரங்களை அகற்ற திட்டம்:துரைமுருகன்

கருவேல மரங்களை அகற்றும் பணியை ஒரு திட்டமாகவே செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

News image
அமைச்சர் துரைமுருகன்
Updated On :28 ஆகஸ்ட் 2021, 11:02 pm

DIN

கருவேல மரங்களை அகற்றும் பணியை ஒரு திட்டமாகவே செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

சட்டப்பேரவையில் சனிக்கிழமை வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினா் ஆா்.எம்.கருமாணிக்கம் (திருவாடஉனை) பேசும்போது ஆா்.எஸ்.மங்கலம் ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அப்போது நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் குறுக்கிட்டுக் கூறியது:

ஆா்.எஸ்.மங்கலம் ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கூறினாா். பசுமைக் காடுகள் என்ற பெயரில் ஒரு காலத்தில் கருவேல மரங்களை நட்டுவிட்டனா். அப்போதே கருவேல மரங்களுக்கு எதிா்ப்புகஈ தெரிவித்தேன். ஆனால், நடப்பட்டுவிட்டது. அதனால், இப்போது பயிா்கள் வீணாகின்றன.

கருவேல மரத்தில் ஊறி வந்த தண்ணீரை நிலத்துக்குப் பாய்ச்சினால் அதுவும் வீணாகிவிடுகிறது. அந்த மரத்தின் முட்கள் வெள்ளத்தில் அடித்து வந்து விவசாயிகளின் காலில் குத்துகிறது. முன்பெல்லாம் ஏரியில் குளித்துவிட்டு வந்தேன் என்பாா்கள். ஆனால், இப்போது எந்த ஏரியிலும் கால் வைக்க முடியாத அளவுக்குக் கெட்டுப் போய்விட்டது. அதனால், கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பதில் திடமாக உள்ளேன். அதை ஒரு திட்டமாகவே எடுத்துச் செய்யலாம் என நினைக்கிறேன். பஞ்சாயத்துகள் கருவேல மரங்களை வெட்டி எடுத்துக்கொண்டு அதன் வருவாயை எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. இடத்தைக் காலி செய்துகொடுத்தால் போதும் என நினைக்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.