கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பளப்பிள்ளி பகுதியில் யானை தாக்கி இருவர் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இன்று (ஆக-30) அதிகாலையில் பலப்பிள்ளி கிராமத்தைச் சேர்த்த சைனுதீன் (50) என்பவரை இரவில் இருந்து காணவில்லை என்பதால் அவரைத் தேடிய போது அருகே இருக்கும் கணபதி கோவிலில் பலத்த காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
இதையும் படிக்க | பெரு : படகு விபத்தில் 11 பேர் பலி , 6 பேர் படுகாயம்
மேலும் அதே பகுதிக்கு உட்பட்ட மற்றொரு இடத்தில் ரப்பர் தொழிலாளியான பீதாம்பரம் (56) அதிகாலை 5.30க்கு வீட்டை விட்டு கிளம்பியவர் 6.30 மணி அளவில் ரப்பர் தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
இறந்த அடையாளங்களை பார்க்கும் போது இருவரும் யானை தாக்கி பலியானார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஒரே பகுதியில் நடந்த இந்த சம்பவம் அங்குள்ள மக்களுக்கு பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.