நாக்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் நாக்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை லாரி - கார் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, நாக்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கல்பாக்கம் பாரதிய நாபிகியா வித்யுத் நிகாம் நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி!
உலை வாங்கு மிதி தோல் - கூடடைய விரையும் தனித்த குரல்!

30, 40களிலேயே மூட்டு வலியா? ஏன்? என்ன செய்ய வேண்டும்?
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

