உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)

உத்தரப் பிரதேசம் : மதுராவில் மது , மாமிசம் விற்பனை செய்ய தடை

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள மற்ற  ஏழு ஆன்மிகதலங்களைக் கொண்ட ஊர்களில்  மது, மாமிசத்தை விற்க தடை விதிப்பதாக புதிய உத்தரவு ஒன்றை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்த
Published on

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள மற்ற  ஏழு ஆன்மிகதலங்களைக் கொண்ட ஊர்களில்  மது, மாமிசத்தை விற்க தடை விதிப்பதாக புதிய உத்தரவு ஒன்றை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார்.

இதையும் படிக்க | 

மதுராவில் நேற்று (ஆக-30) கிருஷ்ணர் ஜெயந்தியைக் கொண்டாட வந்த ஆதித்யநாத் கிருஷ்ணர் வழிபாடு முடிந்ததும் அங்குள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்  மதுராவில் இனி மது, மாமிசம் விற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசிய போது  ‘‘கடந்த 2017 ஆம் ஆண்டு  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிருந்தாவன் மற்றும் மதுரா மாநகராட்சிகள் இணைக்கப்பட்டன. மேலும் இப்பகுதியைச் சுற்றியுள்ள மற்ற ஆன்மிக தலங்கள் புனிதத்தலங்களாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்நகரத்தின் புனிதத்தைக் காக்க இந்த 7 நகரங்களிலும் இனி மது மற்றும் மாமிசங்களை விற்பனை செய்ய அனுமதி இல்லை ' எனத் தெரிவித்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com