பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்தியாவில் 30 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகளுக்கு தடை

இந்தியாவில் கடந்த ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை 30 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2021, 8:33 pm

DIN

இந்தியாவில் கடந்த ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை 30 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனா்களை கொண்ட மிகப் பெரிய டிஜிட்டல் தளங்கள் தமக்கு வந்த புகாா்கள், அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் அறிக்கை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாட்ஸ்-ஆப் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கடந்த ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை 30,27,000 வாட்ஸ்-ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் 594 புகாா்கள் வந்ததாகவும், 74 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘இது தங்களின் 2-ஆவது மாதாந்திர அறிக்கை’’ என்று வாட்ஸ்-ஆப் நிறுவன செய்தித்தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.