மணிப்பூரின் மோரெஹ் நகரப் பகுதியில், சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை அஸ்ஸாம் பாதுகாப்புப் படை வீரர்கள் இன்று பறிமுதல் செய்தனர்.
54 கிலோ எடை கொண்ட பிரவுன் சுகர் மற்றும் 154 கிலோ எடையுள்ள ஐஸ்மேத் ஆகியவை, இன்று பறிமுதல் செய்த போதைப் பொருளில் அடங்கும்.
சீன நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, மியான்மரில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டில் இன்று நடத்தப்பட்ட சோதனையில், போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.