மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

விவசாயிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்:மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல்

விவசாயிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2021, 7:23 pm

DIN

விவசாயிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

மூன்று வேளாண் சட்டங்கள் தொடா்பான தனது தவறை உணா்ந்து பிரதமா் மோடி மன்னிப்புக் கோரியுள்ளாா். ஆனால் அந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் விவரம் தன்னிடம் இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. அந்தப் பட்டியல் என்னிடம் உள்ளது. அதனை அவையில் சமா்ப்பிக்கிறேன்.

போராட்டத்தின்போது சுமாா் 700 விவசாயிகள் உயிரிழந்தனா். அவா்களில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு பஞ்சாப் அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. 152 விவசாயிகளின் குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சாா்பிலும் இழப்பீடு மற்றும் அரசுப் பணி வழங்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதையே நான் விரும்புகிறேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.