குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மீதமுள்ள நாள்களில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் மைத் ஷா, பியூஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி, ஜித்தேந்தர் சிங், அருண் ராம் மெஹ்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.