மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கூண்டோடு ராஜிநாமா செய்த நிர்வாகிகள்; தொடர் பின்னடைவை சந்தித்துள்ள காங்கிரஸ்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கோவா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அம்மாநில நிர்வாகிகள் இன்று கூண்டோடு ராஜிநாமா செய்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :10 டிசம்பர் 2021, 10:30 am

கோவா மாநிலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் ராஜிநாமா செய்திருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஒரு மித்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் அக்கட்சியில் பெரும் குழப்பம் நீடித்துவருகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்திற்கு செல்ல காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி திட்டமிட்டிருந்தார். இதற்கு மத்தியில், போர்வோரிம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு ராஜிநாமா செய்துள்ளனர். 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை காங்கிரஸ் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என ராஜிநாமா செய்த காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதுகுறித்து முன்னாள் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர் குபேஷ் நாயக் கூறுகையில், "வரும் கோவா தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டவில்லை. வெற்று பெறுவதற்காக எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதன் சில தலைவர்களின் அணுகுமுறையிலிருந்து இது தெரியவருகிறது" என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.