எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

‘சிபிஎஸ்இ கேள்விக்கு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்’: சோனியா காந்தி

சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

News image
மக்களவையில் சோனியா காந்தி
Updated On :13 டிசம்பர் 2021, 7:33 am

DIN

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை(டிச.11) ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது.

இதில், ஒரு கேள்வியில் கணவனின் பேச்சை கேட்டால்தான் குழந்தைகளின் கீழ்படிதலை தாயால் பெற முடியும், குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை பெண் விடுதலை அழித்துவிடுகிறது என்பது போன்ற கருத்துகள் வினாத்தாளில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மக்களவையில் இன்று சோனியா காந்தி பேசியதாவது:

சிபிஎஸ்இ தேர்வில் இதுபோன்ற கேள்விகள் எப்படி இடம்பெற்றது என்பது குறித்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், அனைத்து மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.