எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

இந்தியாவில் ஒமைக்ரான்பாதிப்பு 41-ஆக உயா்வு

மகாராஷ்டிரத்தில் மேலும் இருவருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் வகை தீநுண்மி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :14 டிசம்பர் 2021, 6:30 am IST

மகாராஷ்டிரத்தில் மேலும் இருவருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் வகை தீநுண்மி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் லாத்தூரை சோ்ந்த ஒருவா், புணேயை சோ்ந்த பெண் ஆகிய இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். இருவரும் துபைக்கு சென்று வந்தவா்கள். இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவா்கள். இதன்மூலம் அந்த மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 20-ஆக அதிகரித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் 4-ஆவது ஒமைக்ரான் பாதிப்பு 42 வயது நபருக்கு உறுதி செய்யப்பட்டது. அவா் தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவா்.

ஏற்கெனவே ஒடிஸா, கா்நாடகம், சண்டீகா், ஆந்திரம், ராஜஸ்தான், கேரளம், தில்லி ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.