மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காஷ்மீர்: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை.

News image

காஷ்மீர்: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Updated On :14 டிசம்பர் 2021, 7:05 am

காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நேற்று(டிச.13) காவல்துறை பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 காவலர்கள் பலியானதோடு 11 காவல்கள் படுகாயம் அடைந்தனர். 

இந்தத் தாக்குதலுக்கு முன்பாக 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். தற்போது காவல் பேருந்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிற நிலையில் இன்று பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெஹ்ராம்கலா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.

பின் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதலைத் தொடர்ந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

தற்போது இத்தாக்குதலில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் , ஏகே-43 ரக துப்பாகிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.