புது தில்லி: நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் சோழ மன்னர்களின் சாசனங்களை மீட்பதற்காக இந்திய தொல்லியல் துறை மூலம் அந்த நாட்டு அரசிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய கலாசார சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களவை திமுக குழுத் துணைத் தலைவர் கனிமொழி திங்கள்கிழமை பேசுகையில், "நெதர்லாந்து நாட்டிலுள்ள லைடன் பல்கலைக்கழகத்தில் நமது சோழ மன்னர்களின் பழங்கால சாசனங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இவை லைடன் ப்ளேட்ஸ் (அரசவை கொண்டிருக்கும் சாசனம்) என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை மீட்டு நம் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், "லைடன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் சோழ மன்னர்களின் சாசனங்களை மீட்பதற்காக நமது தொல்லியல் துறை மூலம் நெதர்லாந்து நாட்டு அரசுடன் தகுந்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.யில் பள்ளி அருகே புகைமூட்டம்: 26 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி!

2030-31க்குள் 8,000 சேவை மையங்களை அமைக்க மாருதி சுசுகி இந்தியா இலக்கு!

மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு!

எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு

