இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

காஷ்மீர்: தொடரும் என்கவுன்டர், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள உஸ்ரம்பத்ரி பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த  பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்க

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 5:42 am

DIN

காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள உஸ்ரம்பத்ரி பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த  பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம், உஸ்ரம்பத்ரி  பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே , தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தீவிரவாதி பதுங்கியிருப்பதை உறுதி செய்தனர். கைது நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்பாகவே பயங்கரவாதி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

பலியான பயங்கரவாதி ஃபெரோஸ் அகமது தார் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இருந்துகொண்டு பல்வேறு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் ,குறிப்பாக 2017 ஆம் ஆண்டு காவல்துறை மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் முக்கிய மூளையாக இருந்து செயல்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.