விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒமைக்ரான் தலைநகராக மாறும் பிரிட்டன்; கரோனா அலைக்கான எச்சரிக்கையா?

பிரிட்டனில் வெள்ளிக்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 25,000 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 டிசம்பர் 2021, 5:45 am

பிரிட்டனில் ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சனிக்கிழமையும் உயர்ந்துள்ளது. பிரிட்டனில் வெள்ளிக்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 25,000 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வியாழக்கிழமையை ஒப்பிடுகையில், 10,000 பாதிப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளதாக பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பப்படும் ஏழு பேர் வியாழக்கிழமையன்று உயிரிழந்தனர். செவ்வாய்கிழமையை ஒப்பிடுகையில் ஒரு உயிரிழப்பு அதிகமாக பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டோர் எண்ணிக்கை 65லிருந்து 85 ஆக உயர்ந்துள்ளது.

வரவிருக்கும் பெரிய பிரச்னையின் சமிக்ஞையாக இது இருக்கலாம் என அரசு ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர். இந்த பெரிய சம்பவத்தை கையாள்வதற்கான அனைத்து உதவிகளையும் நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு செய்ய வேண்டும் என லண்டன் மேயர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவசரநிலைகளுக்கான அரசு விஞ்ஞான ஆலோசனை குழு, "ஒவ்வொரு நாளும் நூறாயிரக்கணக்கான மக்கள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், புள்ளிவிவரங்களில் அவர்கள் கணக்கு எடுக்கப்படவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாக உள்ளது.

கரோனா விதிகளை மேலும் கடுமையாக்காமல், தற்போது பின்பற்றப்பட்டுவரும் முறையால் இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 3,000 மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்" என தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், தடுப்பூசி திட்டம் வேகம் எடுக்காத சமயத்தில், பிரிட்டனில் ஒரு நாளைக்கு 4,000க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சமீபத்தில் பரவ தொடங்கிய கரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினரே அதிருப்தி தெரிவித்துள்ளனர். புதிய விதிகளை காரணம் காட்டி, பிரெக்ஸிட் அமைச்சர் டேவிட் ஃப்ரோஸ்ட் பதவி விலகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.