கோவா பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆய்வு

கோவா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றுமுதல் மூன்று நாள்கள் ஆய்வு செய்கின்றனர்.
சுஷில் சந்திரா
சுஷில் சந்திரா
Published on
Updated on
1 min read

கோவா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றுமுதல் மூன்று நாள்கள் ஆய்வு செய்கின்றனர்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் மூன்று நாள்கள் கோவா செல்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com