மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜார்க்கண்டில் கும்பல் வன்முறை, கும்பல் படுகொலைக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் வன்முறை மற்றும் கும்பல் படுகொலைக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
Updated On :22 டிசம்பர் 2021, 6:22 am

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் வன்முறை மற்றும் கும்பல் படுகொலைக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் வன்முறை, கும்பல் படுகொலைச் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. 

இதைடுத்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் கும்பல் வன்முறை மற்றும் கும்பல் படுகொலைகள் தடுப்பு மசோதா, 2021 தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் கும்பல் வன்முறைகளைத் தடுக்கவும் மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. 

இதன் மூலமாக கும்பல் வன்முறை மற்றும் கும்பல் கொலைகளில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான சிறைத்தண்டனை கிடைக்கலாம். 

கும்பல் கொலையால் ஒருவர் இறந்தால் அந்த குற்றவாளிகளுக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

கும்பல் வன்முறை, கும்பல் படுகொலைச் சம்பவங்கள் அதிகமாக நடப்பதாகவும் இதனைத் தடுக்க தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று கடந்த 2019ல் உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியது. அதன்படி ஜார்க்கண்ட் அரசு இதுகுறித்து ஆராய ஒரு குழுவை அமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.