ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் வன்முறை மற்றும் கும்பல் படுகொலைக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் வன்முறை, கும்பல் படுகொலைச் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன.
இதைடுத்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் கும்பல் வன்முறை மற்றும் கும்பல் படுகொலைகள் தடுப்பு மசோதா, 2021 தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கும்பல் வன்முறைகளைத் தடுக்கவும் மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
இதன் மூலமாக கும்பல் வன்முறை மற்றும் கும்பல் கொலைகளில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான சிறைத்தண்டனை கிடைக்கலாம்.
கும்பல் கொலையால் ஒருவர் இறந்தால் அந்த குற்றவாளிகளுக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
கும்பல் வன்முறை, கும்பல் படுகொலைச் சம்பவங்கள் அதிகமாக நடப்பதாகவும் இதனைத் தடுக்க தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று கடந்த 2019ல் உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியது. அதன்படி ஜார்க்கண்ட் அரசு இதுகுறித்து ஆராய ஒரு குழுவை அமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் நீரோடையில் புகுந்த ஆம்னி பேருந்து: பயணிகள் 29 போ் காயம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


