மகாராஷ்டிர சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்யப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தொடருக்கு முன்னதாக இன்று செய்யப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் போலீசார் மற்றும் 2 பேர் சட்டப்பேரவை ஊழியர்கள். பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 10 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், அவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிகிறது. ஏனெனில் மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் பேரவை எம்எல்ஏக்கள், பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பதால் கூட்டத்தொடர் தொடங்கியது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குவதையொட்டி 3,500 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஒரு தலைப் பட்சமாக மாறிக் கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை: ப. சிதம்பரம்

எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!

398 சமையல் எரிவாயு உருளை பதுக்கல்: தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரையில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

தென் மாவட்டங்களில் இன்று முதல் ஓபிஎஸ் பிரசாரம்!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

