தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: 10 பேருக்கு கரோனா உறுதி

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்யப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :22 டிசம்பர் 2021, 7:20 am

DIN

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்யப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கூட்டத்தொடருக்கு முன்னதாக இன்று செய்யப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் போலீசார் மற்றும் 2 பேர் சட்டப்பேரவை ஊழியர்கள். பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 10 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 

மேலும், அவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிகிறது. ஏனெனில் மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரத்தில் பேரவை எம்எல்ஏக்கள், பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பதால் கூட்டத்தொடர் தொடங்கியது. 

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குவதையொட்டி 3,500 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.