ஒடிசாவுக்குள் நுழைந்தது ஒமைக்ரான்: மக்களுக்கு நவீன் பட்நாயக் எச்சரிக்கை
ஒடிசா மக்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றுமாறு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.


புவனேஸ்வரம்: ஒடிசாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மாநில மக்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றுமாறு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.
விடியோ மூலம், மாநில மக்களிடம் உரையாற்றியிருக்கும் நவீன் பட்நாயக், உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை கரோனா வேகமாகப் பரவி வருகிறது.
இதையடுத்து நான் மக்களுக்கு ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன், கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது போன்றவற்றை பின்பற்றுங்கள்.
வெளிநாட்டிலிருந்து ஒடிசா திரும்பியவர்களில் கரோனா உறுதி செய்யப்பட்ட இரண்டு பேருக்கு செய்யப்பட்ட கரோனா மரபணு வரிசைமுறை பரிசோதனையில், இருவருக்கும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...