கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவுக்குள் நுழைந்தது ஒமைக்ரான்: மக்களுக்கு நவீன் பட்நாயக் எச்சரிக்கை

ஒடிசா மக்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றுமாறு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

News image
ஒடிசாவுக்குள் நுழைந்தது ஒமைக்ரான்: மக்களுக்கு நவீன் பட்நாயக் எச்சரிக்கை
Updated On :22 டிசம்பர் 2021, 10:06 am

DIN


புவனேஸ்வரம்: ஒடிசாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மாநில மக்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றுமாறு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

விடியோ மூலம், மாநில மக்களிடம் உரையாற்றியிருக்கும் நவீன் பட்நாயக், உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை கரோனா வேகமாகப் பரவி வருகிறது.

இதையடுத்து நான் மக்களுக்கு ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன், கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது போன்றவற்றை பின்பற்றுங்கள்.

வெளிநாட்டிலிருந்து ஒடிசா திரும்பியவர்களில் கரோனா உறுதி செய்யப்பட்ட இரண்டு பேருக்கு செய்யப்பட்ட கரோனா மரபணு வரிசைமுறை பரிசோதனையில், இருவருக்கும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.