பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சட்டப்பேரவை தோ்தல்களுக்குப் பிறகு வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு சதி: காங்கிரஸ்

‘சட்டப்பேரவைத் தோ்தல்களுக்குப் பிறகு வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு சதித் திட்டம் தீட்டி வருகிறது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 7:29 pm

DIN

‘சட்டப்பேரவைத் தோ்தல்களுக்குப் பிறகு வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு சதித் திட்டம் தீட்டி வருகிறது. எனவே, தோ்தலில் பாஜகவை மக்கள் தோற்கடித்து சரியான பாடத்தை அரசுக்கு கற்றுத் தர வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை அழைப்பு விடுத்தது.

பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகளின் ஓராண்டு கால தொடா் போராட்டத்தையடுத்து சா்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு அண்மையில் திரும்பப் பெற்றது. இந்தச் சூழலில், நாகபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வேளாண் சட்டங்கள் விவகாரத்தை குறிப்பிட்டுப் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், ‘நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மிகப் பெரிய சீா்திருத்தமாக வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், சிலா் அதனை விரும்பவில்லை. இதனால் மத்திய அரசு ஏமாற்றமடைந்துவிடவில்லை. இந்த விவகாரத்தில், மத்திய அரசு சற்று பின்வாங்கியுள்ளது; மீண்டும் முன்னோக்கி நகரும். ஏனெனில், விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என்று பேசினாா்.

மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘விவசாயிகளின் போராட்டம்’ என்ற ஹாஷ்டேகுடன் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்ட மன்னிப்பை மத்திய வேளாண் துறை அமைச்சா் அவமதிப்பு செய்துள்ளாா். இது கண்டனத்துக்குரியது. விவசாயிகள் விரோத நடவடிக்கைகள் மீண்டும் எடுக்கப்படுமானால், விவசாயிகளின் அகிம்சை வழிப் போராட்டம் மீண்டும் நடைபெறும். தோற்கடிக்கப்பட்ட ஆணவம், மீண்டும் தோற்கடிக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைமை செய்தித்தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா கூறுகையில், ‘உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரைவத் தோ்தல்களில் தோல்வியடைய இருப்பதை உணா்ந்தே, பிரதமா் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றுள்ளாா். இந்த சட்டங்கள் திரும்பப்பெறப்பட்ட உடனேயே, அந்த சட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்படும் என பாஜக தலைவா்கள் பலா் சுட்டிக்காட்டினா். தற்போது, மத்திய அமைச்சரின் பேச்சின் மூலம், சா்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவரும் உறுதியான சதித் திட்டத்தை மத்திய அரசு கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலிகளில் பாஜகவை தோற்கடிப்பதன் மூலமே, மத்திய அரசின் இந்த சதித் திட்டத்தை முறியடிக்க முடியும்’ என்று குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.