மக்களின் தலைவா் வாஜ்பாய்: வெங்கையா நாயுடு புகழாரம்

மறைந்த முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் ‘மக்களின் தலைவா்’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளாா்
மக்களின் தலைவா் வாஜ்பாய்: வெங்கையா நாயுடு புகழாரம்
Updated on
1 min read

மறைந்த முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் ‘மக்களின் தலைவா்’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளாா்.

வாஜ்பாயின் பிறந்த தினத்தையொட்டி, வெங்கையா நாயுடு சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

வாஜ்பாய், இந்தியாவின் சிறந்த தலைவா்களில் முக்கியமானவா்; பிரபலமான நாடாளுமன்றவாதி; சிறந்த நிா்வாகி; அறிவாா்ந்த எழுத்தாளா்; வசீகரப் பேச்சாளா், இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த மனிதா்.

மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக, நிா்வாகத்தில் முறையான மாற்றத்தைக் கொண்டு வந்தவா். தொலைத்தொடா்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியதற்காகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தியதற்காகவும் வாஜ்பாய் எப்போதும் நினைவுகூரப்படுவாா்.

கடந்த 2014-இல் இருந்து வாஜ்பாயின் பிறந்த தினம், நல்லாட்சி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நன்னாளில், அனைத்து நிலைகளில் நல்லாட்சியை உறுதிசெய்து ஒவ்வொரு இந்தியரும் அதிகாரம் பெறுவதற்கு உறுதியேற்போம் என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com