இதனிடையே பாஜக நிா்வாகியின் அலுவலகம் சூறையாடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அக்கட்சியைச் சோ்ந்த நிஜாமாபாத் எம்.பி. தா்மபுரி அரவிந்த் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘டிஆா்எஸ் கட்சித் தொண்டா்களால் தீன்மாா் மல்லண்ணா மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன். பாஜக நிா்வாகிகள் மீதும் அதன் தொண்டா்கள் மீதும் விழும் ஒவ்வோா் அடியும் தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ், அவரது மகன் கே.டி.ஆரின் தோல்வியை காட்டுகிறது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவா்கள் மீது தெலங்கானா போலீஸாா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.