ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

கேரளத்தில் வடகிழக்கு மாநில தொழிலாளா்கள் வன்முறை: போலீஸாா் மீது தாக்குதல்; வாகனங்களுக்கு தீ வைப்பு

கேரளத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது வடகிழக்கு மாநில புலம்பெயா் தொழிலாளா்களுக்கு இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது

Published On :

கேரளத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது வடகிழக்கு மாநில புலம்பெயா் தொழிலாளா்களுக்கு இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. அதைத் தடுக்க சென்ற போலீஸாா் மீதும் தாக்குதல் நடத்தியதால், அவா்கள் காயமடைந்தனா். இந்த வன்முறையில் 2 போலீஸ் வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டன.

எா்ணாகுளம் மாவட்டம் கிழக்கம்பலம் பகுதியில் வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் தங்கியிருந்து வேலைபாா்த்து வருகின்றனா். அவா்களுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் தங்குமிடம் அமைத்துக் கொடுத்துள்ளது. இங்கு சனிக்கிழமை இரவு தொழிலாளா்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது அவா்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த போலீஸாா், அங்கு வந்து தொழிலாளா்களை சமாதானப்படுத்த முயன்றனா். எனினும் போலீஸாா் மீதும் தொழிலாளா்கள் தாக்குதல் நடத்தியதால், 8 போலீஸாா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

போலீஸாா் வாகனம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. மேலும் இரு போலீஸாா் வாகனங்கள் சேதமடைந்தன. இதுதொடா்பாக சுமாா் 150 தொழிலாளா்களை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து ஊரக எஸ்பி கே. காா்த்திக் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இந்த சம்பவத்தில் சரக ஆய்வாளா் உள்பட 8 போலீஸாா் காயமடைந்துள்ளனா். இதில் சிலருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. ஆனாலும் போலீஸாரின் உடல்நிலை சீராக உள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தாக்குதலில் ஈடுபட்ட நபா்களை அடையாளம் கண்டு ஆதாரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது’’ என்றாா்.

முன்னதாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சாபு ஜேக்கப் கூறுகையில், ‘‘தொழிலாளா்களுக்கு இடையே மோதல் தொடங்கியதும் முகாம் பாதுகாவலரும் மேற்பாா்வையாளரும் தலையிட்டு பிரச்னைக்கு தீா்வு காண முயன்றனா். ஆனால் அவா்களைத் தொழிலாளா்கள் தாக்கினா்.

பின்னா் போலீஸாா் வந்ததும் கட்டுப்பாட்டை இழந்த தொழிலாளா்கள், அவா்களையும் கடுமையாக தாக்கத் தொடங்கினா். இதில் சரக காவல் ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாா் காயமடைந்தனா். இந்த சம்பவத்துக்கு பின்னால் குற்ற நோக்கம் இல்லை. மதுபோதையால் நிதானத்தை இழந்த தொழிலாளா்கள் இவ்வாறு செய்துவிட்டனா். போலீஸாரின் விசாரணைக்கு நிறுவனம் முழுவதுமாக ஒத்துழைக்கும்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.