இந்தியாவில் மேலும் 2 கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோவிஷில்ட், கோவேக்ஸின் மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும் 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மன்சுக் மாண்டவியா டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில்,
இந்தியாவில் ஒரே நாளில் கோர்பிவேக்ஸ் மற்றும் கோவோவேக்ஸ் என்கிற கரோனா தடுப்பூசி, மால்னுபிரவிர் என்ற கரோனா சிகிச்சைக்கு உதவும் மாத்திரை ஆகிய 3 மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மூன்றாவது தடுப்பூசியாகும்.
18 வயதுக்கு மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் மால்னுபிரவிர் என்ற மாத்திரை இந்தியாவில் உள்ள 13 நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


