ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மருத்துவர்கள் மீது தாக்குதல்: காவல் துறைக்கு முதல்வர் கண்டனம்

முதுநிலை நீட் தேர்வை உடனடியாக நடத்தக்கோரி தில்லியில் பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையின் நடவடிக்கைக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

News image
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)
Updated On :28 டிசம்பர் 2021, 11:14 am

DIN

தில்லியில் முதுநிலை நீட் தேர்வை உடனடியாக நடத்தக்கோரி பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையின் நடவடிக்கைக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

நீட் முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வு காலதாமதமாவதைக் கண்டித்து, தில்லியில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

ஒரு மாத காலமாக போராடி வரும் மருத்துவர்கள், நேற்று (டிச.28) தங்களது போராட்டத்தைப் பதிவு செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் நோக்கி மருத்துவர்கள் பேரணியாக புறப்பட்டனர். 

அவர்களது போராட்டத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில், காவலர்கள் மருத்துவ மாணவர்களை இழுத்தும், தள்ளிக்கொண்டும் சென்று கைது செய்தனர்.

இதில் சுமார் 200க்கும் அதிகமான மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் நள்ளிரவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

கரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் தன்னலமற்று மக்கள் சேவையாற்றிய மருத்துவர்களை அவர்களது கோரிக்கைகளுக்காக நியாயமான முறையில் போராட்டத்தில் ஈடுபடும்போது காவல் துறை அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனால் இன்றும் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தில்லி முழுவதும், ஏராளமான மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிப்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் கடுமையாக நடந்துகொண்ட காவல் துறையினருக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.