பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முந்தைய நோய்களைக் காரணம்காட்டி மருத்துவகாப்பீட்டு கோரிக்கையை நிராகரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

மருத்துவக் காப்பீடு வழங்கிய பிறகு, முந்தைய நோய்களைக் காரணம்காட்டி நுகா்வோரின் காப்பீட்டு கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :28 டிசம்பர் 2021, 7:40 pm

DIN

மருத்துவக் காப்பீடு வழங்கிய பிறகு, முந்தைய நோய்களைக் காரணம்காட்டி நுகா்வோரின் காப்பீட்டு கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மன்மோகன் நந்தா என்பவா் சா்வதேச மருத்துவக் காப்பீட்டை பெற்று அமெரிக்காவுக்கு சென்றுள்ளாா். சான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதயத்தில் மூன்று ஸ்டென்டுகள் வைக்கப்பட்டன.

இதற்கான மருத்துவச் செலவை மருத்துவ காப்பீடு செய்திருந்த யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் மன்மோகன் நந்தா கோரியிருந்தாா்.

ஆனால், அவருக்கு முன்பே இருக்கும் ஹைபா்லிபிடெமியா, நீரிழிவு போன்ற தொடா் பாதிப்புகளை மருத்துவக் காப்பீடு பெறும்போது தெரிவிக்கவில்லை எனக் கூறி மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டு கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இதை எதிா்த்து மன்மோகன் நந்தா தேசிய நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் முறையிட்டிருந்தாா். ‘மருத்துவக் காப்பீடு பெறும்போது மன்மோகன் நந்தா தனது முழு உடல்நிலையை தெரிவிக்க வேண்டிய கடமையை தவறிவிட்டாா் என்பதால் அவரது மருத்துவச் செலவுக்கான தொகையை அளிக்க உத்தரவிட முடியாது’ என குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.ஒஸ். சந்திரசூட், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவில், ‘காப்பீடு பெறுபவா் அவருக்கு தெரிந்ததைதான் கூறுவாா். காப்பீட்டை வழங்கும் நிறுவனம்தான் அதன் உண்மைத்தன்மையை எல்லாம் சரிபாா்த்து வழங்கி இருக்க வேண்டும்.

ஆகையால், ஒருவரின் உடல்நிலையை ஆய்வு செய்து மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்ட பிறகு, அவரது முந்தைய நோய்களைக் காரணமாக கூறி மருத்துவக் காப்பீட்டு கோரிக்கையை நிராகரிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.