வரி ஏய்ப்பு மற்றும் போலி ரசீது மூலம் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாா்களின் அடிப்படையில், இந்த அதிரடி சோதனையை ஜிஎஸ்டி அதிகாரிகள் மேற்கொண்டனா். மூா்த்தி நறுமண உற்பத்தி தனியாா் நிறுவனம், ஷிகா் பிராண்ட் பான் மசாலா மற்றும் புகையிலை பொருள்கள் தயாரிப்பு நிறுவனம், கணபதி சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் கிடங்குகளில் ஆமதாபாத்தைச் சோ்ந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் கடந்த புதன்கிழமை இந்த சோதனையைத் தொடங்கினா். அதில், கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் பணம், தங்கம், கணக்கில் காட்டப்படாத நறுமண உற்பத்தி மூலப் பொருள்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் அவற்றின் உரிமையாளா் பியூஷ் ஜெயினை அதிகாரிகள் கைது செய்தனா்.