இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

நாகாலாந்து துப்பாக்கிச் சூடு: ராணுவத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் கடந்த டிச.4ஆம் தேதி தீவிரவாதிகளைத் தேடிச் சென்ற

News image

நாகாலாந்து துப்பாக்கிச் சூடு: ராணுவத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு

Updated On :29 டிசம்பர் 2021, 3:51 pm IST

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் கடந்த டிச.4ஆம் தேதி தீவிரவாதிகளைத் தேடிச் சென்ற ராணுவத்தினா், நிலக்கரி சுரங்கத் தொழிலாளா்கள் சென்ற வேன் மீது தவறுதலாக நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில்14 போ் உயிரிழந்தனா். அதனால் ஆத்திரமடைந்த உள்ளூா் மக்கள் ராணுவத்தினா் மீது நடத்திய தாக்குதலில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். 

இதனால், மக்கள் மீது ராணுவத்தினா் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தேசிய அளவில் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. பின், அச்சம்பவம் குறித்து அமைச்சா் அமித் ஷா ’நாகாலாந்தில் நிகழ்ந்த சம்பவத்துக்காக அரசு வருத்தம் தெரிவிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள்’ எனத் தெரிவித்தார்.

பின், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஆய்வு செய்வதற்காக சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினரை விசாரிக்க ராணுவம் அனுமதியளித்துள்ளது. விரைவில், அவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு சமர்பிக்கட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.