தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பட்ஜெட் உரை நிறைவு: அவை நாளை வரை ஒத்திவைப்பு

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, மக்களவை செவ்வாய்கிழமை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

News image
அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை
Updated On :1 பிப்ரவரி 2021, 7:57 am

DIN

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, மக்களவை செவ்வாய்கிழமை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை திங்கள்கிழமை(பிப்.1) தாக்கல் செய்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். 

சரியாக காலை 11 மணிக்கு உரையைத் தொடங்கிய அமைச்சர் 12.50 மணிக்கு முடித்தார். ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் உரையை வாசித்தார். 

இதையடுத்து, நாடாளுமன்ற அவை நாளை(செவ்வாய்கிழமை) மாலை 4 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரி 2020  பட்ஜெட் உரையை மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன், 162 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பேசி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.