எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நாட்டில் 19 நாள்களில் 44 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிவிரைவாக 19 நாள்களில் 44 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
19 நாள்களில் 44 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
Updated On :4 பிப்ரவரி 2021, 12:03 pm

ANI

புது தில்லி: உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிவிரைவாக 19 நாள்களில் 44 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 19 நாள்களில் நாடு முழுவதும் 44,49,552 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 3,10,604 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் ஒட்டுமொத்தமாக 44,49,552 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய முதல் 19 நாள்களில் அதிகபட்சமாகும்.

ஒட்டுமொத்தமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 54.87 சதவீதம் பேர் 7 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தொடா்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 1-ஆம் தேதி வரை அதிக எண்ணிக்கையிலான கரோனா தடுப்பூசிகளைப் பயனாளிகளுக்கு வழங்கிய முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது. தடுப்பூசிகளை வழங்கும் பணியில் இந்தியா தொடா்ந்து மிக வேகமாக செயல்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.