காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

‘விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக நாடுகளின் ஆதரவு இல்லை’: மத்திய அரசு

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு  உலக நாடுகள் ஆதரவளிக்கவில்லை என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

News image
‘விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக நாடுகளின் ஆதரவு இல்லை’: மத்திய அரசு
Updated On :4 பிப்ரவரி 2021, 10:40 am

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு  உலக நாடுகள் ஆதரவளிக்கவில்லை என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 70 நாள்களுக்கும் மேலாக தில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு மற்ற நாடுகள் ஆதரவளிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள உள்நோக்கம் கொண்ட இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில்  உள்நாட்டு விவகாரங்களில் கனடா தலையிடுவது கண்டனத்திற்குரியதாக குறிப்பிடப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.